கூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….
தாலி கட்டிய பின்னர் அரவாணிகள் மத்தியில் கூத்தும் கும்மாளமும்தான்…
கூவாகத்திலிருந்து மணி ஸ்ரீகாந்தன்.தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களின் தலைமையகம் என்றால் அது தமிழகம்தான்.நாள்தோறும் ஏதேனும் ஒரு முக்கிய கலை கலாச்சார நிகழ்வு எங்காவது ஒரு பகுதியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.எனவே தமிழகம் ஒரு திருவிழா கூட்டமாகத்தான் இருக்கிறது.இச்சிறப்பான திருவிழாக்களில் அவை மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி,குறிப்பிடத்தக்க விழாதான் கூவாகத்தில் வருடா
![]() |
கூத்தாண்டவர் கோயிலின் முகப்புத் தோற்றம் |
சித்திரையில் பிறக்கும் சித்ரா பவுர்ணமி அரவாணிகளுக்கு கொண்டாட்ட நாள்.தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கோயில் சித்ரா பவுர்ணமியில் விழாக்கோலம் பூண்டுவிடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரவாண், திருவிழா பதினைந்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இதில் உள்ள சிறப்பம்சம்.இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான அரவாணிகள் இத்திருவிழாவில் கலந்து கொள்ள கூவாகத்திற்கு படையெடுப்பதுதான்.நீங்கள் உங்கள் வாழ்கையில் எத்தினை அரவாணிகளை பார்த்து இருப்பீர்கள்? இவ்விழாவுக்கு சென்றால் பல்மொழி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த அரவாணிகளை நீங்கள் சந்திக்கலாம்.
தமிழ்,தெலுங்கு, கன்னட, மலையாளம்,இந்தி,குஜராத்,வங்காளி என்று திரும்பிய பக்கமெல்லாம்.அரவாணிகள் தான்.தப்பித்தவறி யார் மீதாவது முட்டிமோதி விட்டு சாரி சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்தால் அவர் நாணப் புன்னகைக்கும் அரவாணியாகத்தான் இருப்பார்.
சென்னையிலிருந்து நூற்றி அறுபத்துரெண்டு கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ம்.தென்னாட்காடு மாவட்டம் இரண்டாக பிரிக்கப் பட்டப்போது உதயமானதுதான் விழுப்புரம் மாவட்டம். புகழ் பெற்ற மயிலம் முருகன் கோயில்,சிங்காரம் கற்குகை கோயில்,வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக் கோட்டை,மேல்மலையலூர் அங்காளப் பரமேஸ்வரி போன்ற எண்ணற்ற சிறப்பிடங்களோடு அரவாணிகள் கூடி விழா எடுக்கும் கூவாகம் கோயிலும்,அமைந்திருப்பது விழுப்பரத்திற்கே உள்ள சிறப்பம்சம்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்திற்கு விழுப்புரத்திலிருந்து செல்ல வேண்டுமானால் ஆட்டோவிற்கு முன்னூறு ரூபா செலவாகும்.ரோடு மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.திருவிழா காலத்தில் மட்டும் விசேட பஸ் சேவை நடத்தப் படுகிறது.முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபா அறவிடுகிறார்கள்.
கூவாகம் மிகவும் பின் தங்கிய கிராமம்.அதிகமான குடிசை வீடுகள்,பொட்டல்வெளி,தரிசுநிலம்,புழுதிமண்ணை தம் மீது வாரி தெளித்தப்படி நிற்கும் முள் செடிகள்.இவைகள்தான் கூவாகத்தின் அடையாளங்கள்.ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் அரவாணிகளை நோட்டம் விட்டப்படியே கூவாகம் அரவாண் அலயத்திற்குள் நுழைந்தோம்.
முன்வாசலில் சுமார் நாற்பதடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் ஆஞ்சநேயர் சிலை எம்மை கைகூப்பி வரவேற்கிறது.வாசலில் இருந்து சுவாமி கருவறை வரை நீண்டு நிற்கும் வரிசை அரவாணை தரிசிக்க காத்திருக்கிறது.
கூட்டம் கூட்டமாக கூடி கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் அரவாணிகள்.சேலை, தாவணி, ஜீன்ஸ்,டீசேர்ட் என்று வர்ணமயமாக அணிவகுத்து வரும் அரவாணிகள்.சில அரவாணிகளின் அழகு தோற்றங்கள் பெண்களை மிஞ்சி விடுவதாக இருந்தன.சில அழகான திருநங்கைகள் தமது ஆசைக் காதலர்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் புளியந்தோப்புக்குள் காற்று புக முடியாத நெருக்கத்தில் மயங்கி கிடந்நதார்கள்.கூவாகம் கோயிலின் சுற்று வட்டாரத்தில் நிறைய புளிய மரங்களும் முற்செடிகளும் சோளக்காடும் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.
சித்ரா பவுர்ணமி இரவு அரவாண் ஆலய குருக்கள் அரவாணிகளுக்கு தாலி கட்டினார்.இதில் நூற்றுக்கணக்கான அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டர்கள்.சில அரவாணிகள் தாலிக் கட்டிக் கொள்ள வில்லை.அப்படி தாலிக் கட்டிக் கொள்ளாமல் கோயிலின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு
![]() |
ePuhLk; muthzpfs;
|
![]() |
Mil khw;Wk; muthzpfs;
|
கூவாகம் திருவிழாவில் அரவாணிகள் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிந்தவர்கள் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்து நோட்டம் விட்டு திரிவார்கள்.அரவாணிகளுடன் கண்டவர்கள் எல்லாம் கூடுவது எயிட்ஸ் மற்றும் வேறு பால் வினை நோய்களை பரவச் செய்யும் என்பதால் பல சமூக நிறுவனங்கள் இலவசமாக ஆணுறைகளை விநியோகிக்கின்றனர்.இது ஒருபுறம்
![]() |
mofp my;y muthzp
|
![]() |
muthzpfspd; jhyp mWf;fg; gLfpwJ.
|
களப்பலி என்பது யுத்ததிற்கு முன் அறிவிக்கப்படும் உயிர்
![]() |
xg;ghhp itf;Fk; muthzpfs;
|
இந்த அரவாணுக்கு இந்தியாவிலேயே கூவாகத்தில் மட்டுமே கோவில் உள்ளது.இதனால் இக்கோவிலை நாடி இந்தியா எங்கும் உள்ள அரவாணிகள் வருகிறார்கள்.தமக்கென ஒரு அடையாளம் இல்லாத இவர்கள் இக் கோவிலையும்,திருவிழாவையும் தனித்துவ அடையாளமாக கருதி போற்றுகிறார்கள்.தமக்கென ஒரு குலதெய்வம் இருப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள்.இந்த திருவிழாவில் அரவாணை மணக்கும் அரவாணியாகத் தம்மை கருதி தாலிக் கட்டிக் கொள்ளும் அரவாணிகள் மறுநாள் அரவாண் களப் பலியானதும் தாலியை அறுத்துக் கொள்கிறார்கள்.இவ்வாறு விளக்கம் தந்தார் வீரன்.
![]() |
Mirf;fhjyDld; muthzp
|
அரவாணிகள் ஆட்டம் நிற்பதாக இல்லை.இளைஞர்கள் ஆளாளுக்கு ஒரு அரவாணியை இழுத்துக் கொண்டு புளியந்தோப்புக்குள் மறைந்தார்கள்.வைத்தக்கண் வாங்காம புளியந்தோப்பை பார்த்து கொண்டிருந்த எம்மை நோக்கி வந்த ஒரு நபர் “விடியும் வரைக்கும் இதே
கூத்துதாங்க,”விருப்பமானால் சொல்லுங்க ஒரு அரவாணியை ஏற்பாடு செய்கிறேன் என்றார் முகமெல்லாம் சிரிப்பாய்…அந்த சமூக சேவகருக்கு நன்றி சொல்லி விட்டு ஆட்டோ பிடித்து விழுப்புரம் வந்து ஹோட்டலில் தங்கினோம்.விழுப்புரம் தங்கும் விடுதிகள் அனைத்தும் வெளியூரில் இருந்து வந்த அரவாணிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் பக்கத்து அறைகளில் தங்கியிருக்கும் அரவாணிகள் இளைஞர்கள் தங்கியிருக்கும் அறைகளின் கதவைத் தட்டுவார்கள் என்று என் நண்பர் சொன்னது எம் ஞாபகத்துக்கு வர தாழ்ப்பாளை சரி பார்த்துக் கொண்டோம்.விடிய காலை மூன்று மணியிருக்கும் …எனது அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.
இதன் அடுத்த பகுதி; விரைவில்…..
No comments