சூடேற்றில் விழுந்து நபர் மரணம் உடல் கரைந்த பயங்கரம்
200 டிகிரி வெப்ப சூடேற்றியில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
யெல்லோஸ்டோன் தேசிய இயற்கை பூங்கா காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது.
ஆபத்தான பிரதேசம் உட்செல்ல தடை என வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாது சகோதரியுடன் சென்று சூடேற்றியின் அருகில் சென்று நீரின் மீது கை வைப்பது போல் புகைப்படம் எடுக்கும் போது, அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் ஜூன் மாதம் 7ம் திகதி இடம்பெற்றிருந்தாலும் தற்போது ஒரு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் விபரங்கள் கூறியதால் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

No comments